Friday, September 23, 2011

எல்லோருக்கும் வணக்கம்


வாழ்க வையகம் ----------------------------------------------------------- வாழ்க வளமுடன்

அதோ இதோ என்று ஒரு வழியாக நானும் பிளாஃகிங் ஆரம்பித்து விட்டேன்.



ரொம்ப நாளாகவே வாழ்க்கை ரொம்பவுமே routine ஆக இருக்கிறது

1. தினமும் காலை 7 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து 8 மணிக்கு ( சரி சரி .... எல்லா நாட்களிலும் 7 மணியும் 8 மணியும் கடைபிடிக்கப்படுவதில்லை ) தினமும் செல்கின்ற அதே பஸ் படித்து தினமும் செல்கின்ற அதே ஆபிஸ் செல்கிறேன்.
2. தினமும் செல்கின்ற அதே லிஃப்ட்ல் சென்று எனது சீட்டில் அமர்கிறேன்.
3. எப்பவும் அதே வேலையை வேறு வேறு நேரங்களில் செய்கிறேன்.
4. மாலை 6 மணிக்கு அதே ரயிலை பிடித்து வீடு வருகிறேன்.
5. எப்பவும் போல இண்டர் நெட்டில் அமர்ந்து எதையாவது மேய்ந்து கொண்டிருக்க இரவு வருவது தெரிவதில்லை.
6. எப்படியும் 11 இருந்து 12 க்கு அப்புறமாக தூங்க செல்வேன்.

இது வரைக்கும் சமையல் வேலை இருந்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லை.

வார இறுதி நாட்கள், துணி துவைப்பதற்கும் வீட்டிற்கு வேண்டிய மளிகை வாங்கவும் சரியாக போய்விடுகிறது.

நண்பர் ஒருவர் Jackiesekar பிளாஃக் அட்ரஸ் கொடுத்து படிக்கச் சொன்னார். Jackie ன் பதிவுகள் நன்றாக இருந்தது. அப்படியே மற்ற தமிழ் பதிவாளர்களைப் பற்றியும் தெரிய வர அவற்றையும் படிக்க அரம்பித்தேன். அப்படி படிப்பது நல்ல உற்சாகத்தை தரவே எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆவல் வந்தது.

நாலு பேர் இதை படிக்க போறாங்க அப்படினு நினைக்கும் போதே உள்ளுக்குள் ஓரு கூச்சம். இதனாலேயே நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது. இறைவன் அருளால் நன்றாக எழுதுவேன் என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment