Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Wednesday, October 26, 2011

பயணங்கள் முடிவதில்லை - சுற்றுலா



பள்ளியில் மூன்றாவது படித்தபோது கல்விச் சுற்றுலா என்று சொல்லி கேரளாவுக்கு சென்றதுதான் முதன் முதலில் சென்ற சுற்றுலா. அதில் போனபோது புது இடங்களைப் பார்க்கும் சந்தோஷத்தை விடவும், தொலைந்து போய்விடுவோமோ என்ற பயம்தான் மிகுந்து இருந்தது. மழம்புளா டேம் பார்க்கில் ஒரு சிறிய தொங்கு பாலம் போல் ஒன்று இருந்தது. அதில் நடக்கும்போது கம்பி அறுந்து தண்ணியில் நான் விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயந்து, பாலத்தை கடக்க அரைமணி நேரம் யோசித்துக் கொண்டிருந்த கொடுமையெல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.